அத்வானி சிபாரிசு: டிவிக்கு ஜெ. சிறப்பு பேட்டி
சென்னை:
சமீப காலமாக எந்தப் பத்திரிக்கைக்கும், தொலைக்காட்சிக்கும் தனிப்பட்ட சிறப்பு பேட்டி ஏதும் அளிக்காத முதல்வர் ஜெயலலிதாசில நாட்களுக்கு முன் இந்தியா டுடேவின் ஆஜ்தக் தொலைக் காட்டிக்கு சிறப்புப் பேட்டியளித்தார்.
பாஜக தலைவர் அத்வானியின் சிபாரிசின் பெயரில் தான் இந்தப் பேட்டிக்கு ஜெயலலிதா ஒத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.வெளியில் பாஜகவோடு கூட்டணி இல்லை என்ற பிரம்மையை அதிமுக ஏற்படுத்தினாலும் உள்ளுக்குள் எல்லாம்நல்லபடியாகவே நடந்து வருவதாகத் தெரிகிறது.
ஆஜ்தக் தொலைக்காட்சியில் இந்தியா டுடேவின் தலைமை ஆசிரியர் பிரபு சாவ்லாவுக்கு ஜெயலிலதா அளித்துள்ள பேட்டியில்,மத்திய அரசையும் திமுக தலைவர் கருணாநிதியையும் போட்டு வாங்கியிருப்பதாகத் தெரிகிறது.
பல மாதங்களுக்கு முன் பிபிசி தொலைக்காட்சிக்காக கரன் தாப்பர் முதல்வர் ஜெயலலிதாவை பேட்டி கண்டபோது, அவரைஜெயலலிதா கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. சங்கடமான கேள்விகளை தாப்பர் கேட்டபோது அவரை ஜெயலலிதாபேட்டியிலேயே கடிந்து கொண்டது நினைவுகூறத்தக்கது.
இதையடுத்து யாருக்கும் தனிப்பட்ட பேட்டி அளிக்காமல் இருந்த ஜெயலலிதா, அத்ாவனி கேட்டுக் கொண்டதால் ஆஜ் தக்தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தாராம்.
இதற்கிடையே தனது கூட்டணியில் சேர அதிமுக விரித்த வலையில் பாமக, மதிமுக ஆகியவை விழாததால் வரும் சட்டமன்றத்தேர்தலில் கூட்டணியில் பாஜக நிச்சயம் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.
அத்வானி மூலமாக அதற்கான வேலைகளை ஜெயலலிதா செய்து முடிப்பார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications