வெளிநாட்டில் வேலை: 700 பேரிடம் ரூ. 7 கோடி மோசடி- 3 மலையாளிகள் கைது
கோவை:
வெளி நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 700 தமிழக, கேரள இளைஞர்களிடம் ரூ. 7 கோடி வரை வசூலித்துவிட்டுஏமாற்றிய கேரளத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையை மையமாகக் கொண்ட ஒரு டிராவல் மற்றும் வேலைவாய்ப்பு ஏஜென்சி கோவையில் தனது கிளையைத் திறந்தது. இதைநடத்தியது மலையாளிகள். வளைகுடா உள்ளிட்ட வெளி நாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக இவர்கள்விளம்பரம் செய்தனர்.இதை நம்பிய தமிழக, கேரள இளைஞர்கள் இந்த ஏஜென்சியைத் தொடர்பு கொண்டனர். அவர்களை அவர்களது வசதிக்கு ஏற்பஏமாற்றினர் இந்த ஏஜென்சியை நடத்திய மலையாளிகள்.
ஒவ்வொருவரிடம் இருந்து தலா ரூ. 50,000 முதல் ரூ. 2.25 லட்சம் வரை வசூல் செய்தது இந்தக் கும்பல். இதையடுத்துஇவர்களுக்கு கால் லெட்டர்களுக்கு அனுப்பப்பட்டது. அதில் நேர்முகத் தேர்வுக்காக கோவை வருமாறு கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த 700 பேரும் கோவைக்கு வந்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது இந்த நிறுவனத்தின் அலுவலகம்மூடப்பட்டிருந்தது. மாலை வரை திறக்கப்படவில்லை.
சந்தேகமடைந்த வாலிபர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் இந்தஏஜென்சியை நடத்தியவர்களோடு தொடர்பு வைத்திருந்த 5 பேரைக் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ. 40 லட்சத்தைமீட்டனர்.
இந்த 5 பேரும் தந்த தகவல்களை வைத்து கேரளாவுக்கு விரைந்த தமிழக போலீஸ் சிறப்புப் படை பாலக்காட்டில் வைத்து 2பேரையும் கோட்டயத்தில் பதுங்கியிருந்த ஒருவரையும் இன்று கைது செய்தனர். இவர்கள் தான் இந்த ஏஜென்சியை நடத்திவந்தவர்கள்.
இவர்களிடம் இருந்து பணம், நகை, வீட்டு, நில பத்திரங்கள் என ரூ. 20 லட்சம் அளவுக்கு மீட்கப்பட்டுள்ளது. இவர்களிடம்விசாரணை நடத்தப்பட்டதில் ஏஜென்சியின் உரிமையாளர் மும்பையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவனைப் பிடிக்கதனிப்படை விரைந்துள்ளது.












Click it and Unblock the Notifications