வாஸ்து எங்கள் தோஸ்து: கடைகளை உடைக்கும் காஞ்சி மடம்!
காஞ்சிபுரம்:
காஞ்சி மடத்துக்கு வந்த சோதனைகளுக்கு எல்லாம் வாஸ்து தான் காரணம் என்று கருதும் ஜெயேந்திரர் தரப்பு இப்போது பரிகாரவேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மடத்தின் தெற்கு நோக்கிய வாயிலை கிழக்கு நோக்கியதாக மாற்றினால் எல்லா தொல்லையும் நீங்கிவிடும் என்று வாஸ்துநிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளார்களாம். இதையடுத்து வாயிலை மாற்றும் வேலை ஆரம்பாகியுள்ளது.இதற்காக மடத்துக்குச் சொந்தமான 4 கடைகளை இடிக்க வேண்டியுள்ளதாம். இந்தத் தகவல் ஆளும் தரப்புக்குப் போனால்,கடையில் வாடகைக்கு இருப்பவர்களை வைத்து அரசியல் பண்ணி வாஸ்து வேலைக்கு தடை போட்டுவிடுவார்கள் என்றுபயந்ததாம் ஜெயேந்திரர் தரப்பு.
இதையடுத்து அந்தக் கடைக்காரர்களைக் கூப்பிட்டு மிக அன்பாகப் பேசி, கையில் பல லட்சங்களைத் திணித்தார்களாம். எந்தப்பிரச்சனையும் பண்ணாம ஒதுங்கிக்கனும், கடைகளை காலி பண்ணனும் என்று கோரிக்கை வைத்தார்களாம்.
கடை வைத்து நடத்தினால் கிடைக்கும் லாபத்தை விட பல மடங்கு லாபம் திடீரென கையில் திணிக்கப்பட்டதால் மகிழ்ந்து போன4 கடைக்காரர்களும் காலி செய்துவிட்டார்களாம்.
இதையடுத்து கடைகளை மூடிவிட்டது காஞ்சி மடம். அடுத்து அந்தக் கடைகள் மீது உளியும் சுத்தியலும் ஜோடி போட்டு இறங்கிகடைகளைக் காலி செய்யுமாம். அதைத் தொடர்ந்து மடத்தின் வாசல் கிழக்குக்கு வரும்.












Click it and Unblock the Notifications