For Daily Alerts
Just In
இலங்கை அதிபர் தேர்தல்: பிரச்சாரம் ஓய்ந்தது
கொழும்பு:
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவடைந்தது.
அங்கு வரும் 17ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. சந்திரிகா குமாரதுங்காவின் மக்கள் விடுதலைக் கட்சியின் சார்பில்பிரதமர் மகிந்தா ராஜபக்ஷேவும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் போட்டியில்உள்ளனர்.இரு தலைவர்களுமே தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்போம் என்று கூறி தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
வட கிழக்குப் பகுதியில் வாக்குகளைப் பெற விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற ரணில் தீவிரமாக முயன்று வருகிறார்.ஆனால், யாருக்கும் ஆதரவளிப்பதில்லை என்ற நடுநிலையை விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளனர்.
இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடையவுள்ள நிலையில், ரணில், ராஜபக்சே தவிர மேலும் 11 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
இந்தத் தேர்தல் பணிகளை புறக்கணிக்குமாறு மக்கள் சக்தி என்ற அமைப்பு தமிழ் அதிகாரிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.மேலும் தேர்தலையே புறக்கணிக்குமாறு திரிகோணமலை, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மாணவர் சங்கங்களின்பேரவையும் கோரிக்கை விடுத்துள்ளன.
Comments
Story first published: Tuesday, November 15, 2005, 5:30 [IST]