For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வக்பு வாரிய நிலங்கள் மீட்கப்படும்: தமிழக அரசு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இஸ்லாமியப் பெண்களுக்கு கல்வி கிடைக்கச் செய்ய அனைத்து மாநில வக்பு வாரியங்களும் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் எனமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழக வக்பு வாரியத்தின் சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து மாநில வக்பு வாரியங்களின் தலைவர்கள்மாநாட்டில் ஜெயலலிதா பேசியதாவது:

முஸ்லீம்களின் முன்னேற்றம், குறிப்பாக முஸ்லீம் பெண்களின் முன்னேற்றத்துக்கு, கல்வி தான் ஒரே வழி.

வக்பு வாரியங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இது மிகுந்த கவலை தரும்விஷயமாகும்.

இந்த நிலங்களை மீட்பு வக்பு வாரியங்களிடம் ஒப்படைக்கும் பணி அனைத்து மாநில அரசுகளுக்கும் உண்டு. தமிழகத்தில் வக்புவாரியத்தின் சொத்துக்களை அடையாளம் காண சர்வே நடத்தப்பட்டு வருகிறது.

ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ள இந்த சொத்துக்குள் வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தவிஷயத்தில் வக்பு வாரியத்துக்கு என அரசு முழு உதவி புரியும் என்றார் ஜெயலலிதா.

சட்டமன்றத் தேர்தல் வருவதையொட்டி அனைத்துத் தரப்பினருக்கும் சலுகைகளை அறிவித்து வரும் ஜெயலலிதா,இஸ்லாமியர்களின் ஓட்டுக்களை மனதில் வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆட்சியில் இருந்த 5 வருடத்தில் ஒருமுறை கூட வக்பு வாரியங்களுக்கான மாநாடு எதையும் ஜெயலலிதா அரசு நடத்தியதில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X