சபரிமலையில் இன்று நடை திறப்பு
Subscribe to Oneindia Tamil
சபரிமலை:
சபரி மலையில் அய்யப்பன் கோவில் மண்டல பூஜையையொட்டி இன்று நடை திறக்கப்படுகிறது.
கேரள மாநிலம் சபரிமலையில் மண்டல பூஜைக்காக கார்த்திகை மாதத்துக்கு முந்தைய நாள் நடை திறக்கப்படுவதுவழக்கம். கார்த்திகை மாதம் நாளை (புதன்கிழமை) பிறக்கிறது. இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.தந்திரி கண்டரரு மோகனரு முன்னிலையில் தற்போதைய மேல்சாந்தி முரளிதரன் நம்பூதிரி, கோவில் நடையைதிறந்து வைத்தார். ஆனால், இன்று பூஜைகள் நடக்காது.
சபரிமலை ஐயப்பன் கோயில், மாளிகைபுரம் கோயில்களுக்கு புதிய மேல்சாந்திகள் இன்று இரவு பொறுப்பேற்றுக்கொள்கிறார்கள். நாளை முதல் இவர்கள் பூஜை செய்கின்றனர்.
மண்டல பூஜையை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகம் 4.30 மணிக்கு நெய்அபிஷேகம் தொடங்குகிறது. மதியம் நடை அடைக்கப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications