நாற்காலி கனவு இல்லை: வைகோ
சென்னை:
கனவுகள் தலைமுறையைப் பற்றியதாக இருக்க வேண்டுமே தவிர நாற்காலி கனவு வேண்டாம் என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
சென்னையில் வழக்கறிஞர் இரா.நடராஜனின் கவிதை மட்டுமல்ல என்ற நூலை வைகோ வெளியிடபேராசிரியர்கள் சுப.வீரபாண்டியன், ஷாகுல் அமீது ஆகியோர் முதல் பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.விழாவில் பேசிய சிலர் வைகோ முதல்வராக வரவேண்டும் என்றனர்.
இதற்கு பதிலளித்து வைகோ பேசியதாவது:
பத்திரிகைகளில் வருவது பற்றி இங்கு குறிப்பிட்டார்கள். கருத்து சுதந்திரம் உண்டு என்பதால் எதாவது கருத்தைகூறி எல்லோரும் பாரட்ட வேண்டும் என்று ஏன் நினைக்க வேண்டும். கடும் இருட்டடிப்புக்கு இடையேஎப்படியாவது செய்தி வந்ததே என ஏன் கருத வேண்டும். எந்த இருளும் நிரந்தரமல்ல.
தூய்மையான லட்சியத்தோடு நாம் செயல்பட்டு வருகிறோம். நமது கனவுகள் தலைமுறையை பற்றியதாக இருக்கவேண்டும் தலைவரைப் பற்றியதாக இருக்க கூடாது. நாற்காலி பற்றியதாக இருந்திடக் கூடாது.
எந்த இனமும் உயர்ந்த கலாசாரத்தைக் கருவாக கொண்ட படையாக இருந்தால் தான் எதிரிகளை வெல்லும்படையாக இருக்க முடியும் என்று மாவோ எழுதினார். கவிதையை காலத்தை காட்டும் கண்ணாடி என்று அண்ணாகூறினார்.
சமுதாய பிரச்சினைகளை உள்ளடக்கியதாக கவிதை இருக்க வேண்டும். திமுக தலைவர் தினமும் முரசொலியில்கவிதைகளை எழுதி வருகிறார். அவரது கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications