விஜய்காந்த் அடங்கி, ஒடுங்கி, அமுங்கியது ஏன்?: அன்பரசு கேள்வி
சென்னை:
குஷ்பு, சுகாசினி விவகாரத்தில் விஜய்காந்த் அடங்கி, ஒடுங்கிப் போனது ஏன், தமிழர்களை அவருக்குப் பிடிக்காதா என்று மூத்தகாங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்பியுமான அன்பரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நான் தான் தமிழ்நாட்டையே காப்பாற்றப் போகிறேன். நான் தான் பெரிய பரோபகாரி அரசியல் தலைவன் என்று தனக்குத் தானேபாராட்டுத் தெரிவித்துக் கொள்ளும் விஜய்காந்த், குஷ்பு பிரச்சனையில் அப்படியே அடங்கி ஒடுங்கிப் பாய்விட்டார்.
ஏன் அப்படிச் செய்தார்? தமிழர்கள் பிரச்சனை தானே என்பதால் அப்படி ஒதுங்கிக் கொண்டாரா? அல்லது தமிழர்களைஅவருக்குப் பிடிக்கவில்லையா? அல்லது தான் தமிழனே அல்ல என்பதாலா?
தமிழர்கள் பணத்தில் வாழும் குஷ்பு தமிழ்ப் பெண்களை கொச்சைப்படுத்தியது பெரும் தவறு. அவருக்கு ஆதரவாகப் பேசியசுகாசினி தன்னை பெரிய ஜீனியஸாக அறிவுஜீவியாக கருதிவிட்டார் போலும்.
அரசியலிலும் சினிமாவிலும் பிழைப்பு தேடி பிற இடங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்துள்ளவர்களுக்குத் தான் கொம்புமுளைத்து விடுகிறது. இந்த இரண்டு பேருமே முதலில் பகிரங்கமாக பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.












Click it and Unblock the Notifications