அர்ச்சகர்கள் ஓய்வூதியம் உயர்வு: ஜெ.
சென்னை:
கோவில் ஓதுவார், பூசாரி, அர்ச்சகர்களின் மாத ஓய்வூதியத் தொகையை ரூ. 750 ஆக உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள், மக்கள் இறை நம்பிக்கையுடன் கூடி வழிபடும் மையங்கள் என்பதோடு மட்டுமில்லாமல்நமது தொன்மையான வரலாற்றையும் பண்பாட்டையும் உலகுக்கு எடுத்துக் கூறுகின்ற உன்னதத் திருத்தலங்களாகவும்விளங்குகின்றன.
திருக் கோயில்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓதுவார்கள், அரையர்கள், திவ்விய பிரபந்தம் பாடுவோர், அர்ச்சகர்கள்,வேதபாராயணர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின்கட்டுப்பாட்டில் இல்லாத சிறு திருக்கோயில் பூசாரிகள் ஆகியோர் தற்போது ஓய்வூதியமாக மாதம் ரூ. 500 பெற்று வருகின்றனர்.
இனி இவர்களின் ஓய்வூதியத் தொகை ரூ.750 ஆக உயர்த்தி வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன். இது உடனடியாகஅமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.