For Daily Alerts
Just In
நாளை இலங்கை அதிபர் தேர்தல்
கொழும்பு:
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. தேர்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமைவெளியாகும்.இலங்கையின் 5வது ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரம் திங்கள்கிழமை முடிவடைந்தது.
அதிபர் பதவிக்கு இலங்கை சுதந்திரா கட்சியின் சார்பில் ப் போட்டியிடும் பிரதமர் ராஜபக்ஷேவுக்கும் எதிர்க் கட்சியான ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையில் நேரடி போட்டி நிலவுகிறது.
சுமார் 1.3 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்ற இந்தத் தேர்தலில் வட-கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவோம் என இருவேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் செய்தனர்.
Comments
Story first published: Wednesday, November 16, 2005, 5:30 [IST]