செக்ஸ் சுங்க அதிகாரிக்கு குண்டர் சட்டம் செல்லும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிறுமிகளை கற்பழித்த சுங்க அதிகாரி ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்ட குண்டர் சட்டம் செல்லும் என்று சென்னைஉயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த சுங்க அதிகாரி ராதாகிருஷ்ணன், சிறுமிகளுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு,சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இதை தொடர்ந்து செக்ஸ் வெறியரான ராதாகிருஷ்ணனை கமிஷனர் நடராஜ் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ராதாகிருஷ்ணனின் தாய் பாக்கியம்மாள், சிறையில் அடைக்கப்பட்டுள்ள எனது மகன் மீதான குண்டர் சட்டத்தைரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.பாலசுப்பிரமணியம், தணிகாசலம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சுங்கஅதிகாரிக்கு கமிஷனர் விதித்த குண்டர் சட்டம் செல்லும், எனவே அந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பு கூறிமனுவை தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications