ஜெ குறித்து அவதூறு: நீதிமன்றத்தில் ஸ்டாலின் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு:
முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் திமுக துணை பொதுச்செயலாளர்.ஸ்டாலின் இன்று ஆஜராகிறார்.பூந்தமல்லி ஆண்டர்சன்பேட்டை உள்பட 2 இடங்களில் நடந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகபேசியதாக ஸ்டாலின் மீது செங்கல்பட்டு செசன்ஸ் நீதிமன்றத்தில் அதிமுக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வருவதையொட்டி நீதிமன்றத்தில் ஸ்டாலின் இன்று ஆஜராகிறார்.
இதே போல பொதுக் கூட்டங்களில் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் சுந்தரம்மற்றும் பரிதி இளம்வழுதி, எம்பி கிருஷ்ணசாமி உள்பட 12 பேர் நேற்று செங்கை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
இவர்கள் மீதான விசாரணையை நீதிபதி அக்பர் அலி அடுத்த மாதம் 20ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications