மாநகராட்சி கூட்டம்: தடை கோரி புது வழக்கு
சென்னை:
துணை மேயர் கராத்தே தியாகராஜன், மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் விஜயகுமார் ஆகியோர் அறிவித்துள்ளமாநகராட்சி கூட்டங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கமிஷனர் விஜயகுமார் இம்மாதம் 21ம் தேதி மாநகராட்சி கூட்டம் கூட்டப்படும் என்றும், அதே சமயத்தில் துணை மேயர் கராத்தேதியாகராஜன் இம்மாதம் 28ம் தேதி மன்ற கூட்டம் கூட்ட வேண்டும் என்றும் அறிவித்திருந்தார்.இந்த 2 கூட்டங்களுக்கும் தடைவிதிக்க கோரி 39வது வார்டு கவுன்சிலர் பன்னீர் செல்வம் (அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்)சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு தமிழக உள்ளாட்சி துறை செயலாளர், மாநகராட்சி ஆணையர், கராத்தே தியாகராஜன் மற்றும் மன்ற செயலாளர் உள்பட5 பேருக்கு எதிராக தாக்கல் செய்ப்பட்டுள்ளது.
அவரது மனுவில், மன்ற கூட்டத்தை கூட்ட கமிஷனருக்கு அதிகாரம் இல்லை எனவும், தலைமறைவாக இருக்கும் கராத்தேஎவ்வாறு மன்றத்தை கூட்ட முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த மனு நாளை நீதிபதி நாகப்பன் முன் விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் கராத்தே தியாகராஜன் சார்பாக கமிஷனர் கூட்ட உள்ள மன்ற கூட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்படவிருந்தமனு அவரது கையெழுத்து இல்லாத காரணத்தால் தாக்கல் செய்யப்படவில்லை. கையெழுத்து வாங்குவதற்காக கராத்தேவின்வழக்கறிஞர்கள் டெல்லி சென்றுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications