For Quick Alerts
For Daily Alerts
Just In
அமைச்சர் பங்கேற்ற விழாவில் வெடிகுண்டுப் புரளி
சேலம்:
சேலத்தில் அமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமி வருகை தந்த பள்ளியில் வெடிகுண்டு க்ைகப்பட்டதாக மிரட்டல் வந்தது.இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்தில் ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க சமூக நலத்துறை அமைச்சர் விஜயலட்சுமி வந்தார். அவர்பள்ளிக்குள் நுழைந்த அடுத்த சில நிமிடங்களில் அங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக பள்ளி நிர்வாகிகளுக்கு மிரட்டல்தொலைபேசி வந்தது.இதையடுத்து அமைச்சர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களும் வெளியேற்றப்பட்டனர்.
விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்களும் போலீசாரும் பள்ளியில் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், நீண்ட சோதனைக்குப்பிறகும் குண்டு ஏதும் சிக்கவில்லை.
இதையடுத்து மீண்டும் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 1,700 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் இலவசசைக்கிள்களை வழங்கினார்.
Comments
Story first published: Thursday, November 17, 2005, 5:30 [IST]