அரசு வேலைக்கு ஆள் சேர்க்க பாமக கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

திண்டிவனம்:

வேலை தடை சட்டத்தை வாபஸ் பெறக் கோரி சென்னை கோட்டை முன்பு வருகிற 29ம் தேதி உண்ணாவிரதபோராட்டத்தை நடத்த போவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது::

கடந்த 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு வேலை நியமன தடை சட்டம் அதிமுக அரசு கொண்டு வந்தது.

தற்போது 2005ம் ஆண்டுடன் 4 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் 2 லட்சத்திற்கு மேல் அரசுபணியிடங்கள் காலியாக உள்ளன.

வரும் 2006ம் ஆண்டில் 3 லட்சம் பேர் தமிழக அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் நிலை உள்ளது.

தனியார் துறையில் இடஒதுக்கீடு இல்லாத நிலையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்ஆகியோருக்கு உள்ள 69 சதவீத இடங்களிலும் படித்து வேலையில்லாமல் தவிக்கின்ற 54 லட்சம் இளைஞர்களுக்குஅதிமுக அரசு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது.

இதற்காக சென்னை கோட்டைக்கு முன்னால் வருகிற 29ம் தேதி பாமக எம்எல்ஏகள் உண்ணாவிரத போராட்டம்நடத்துகிறார்கள்.

இதை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் பொது செயலாளர் திருமாவளவன், பாமக எம்பிகள் கூட்டத்தில்பேசுவார்கள் என்று கூறினார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+