For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில் டிரைவரை தாக்கிய மயில்!: என்ஜினுக்குள் நடந்த களேபரம்!!

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரையில் ரயில் என்ஜின் முகப்பு கண்ணாடியை உடைத்து கொண்டு உள்ளே வந்த மயில் டிரைவரை கொத்தித் தாக்கிவிட்டுபறந்து சென்றது.

இந்த அதிய சம்பவம் குறித்த விவரம்:

மதுரையிலிருந்து தென்காசிக்கு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலை நோக்கிப் பறந்து வந்த மயில் ஒன்றுஎன்ஜினின் முகப்பு கண்ணாடி மீது மோதியது. இதனால் என்ஜினின் கண்ணாடி உடைந்து மயில் உள்ளே வந்து விழுந்தது.

இதில் அந்த மயில் இறக்கவில்லை. காயமடைந்த அந்த மயில் டிரைவர் கேபினுக்குள் அங்குமிங்கும் பறந்தது. வெளியே போகவழி தெரியாமல் தடுமாறிய அந்த மயில் திடீரென ரயிலை இயக்கிக் கொண்டிருந்த டிரைவர் பன்னீர் செல்வத்தைத் தாக்கியது.

டிரைவரை நகங்களால் பிராண்டியும், அலகுகளால் குத்தியும் காயப்படுத்தியது.

தடுமாறிப் போன டிரைவர் மயிலை தூரமாகத் தள்ளினார். இதையடுத்து ஒரு வழியாக ஜன்னல் வழியே அந்த மயில் வெளியேபறந்து சென்றுவிட்டது. இந்த மயில் தாக்குதலில் படுகாயம் அடைந்த டிரைவர் பன்னீர் செல்வம் ரத்தம் சொட்ட சொட்டஅப்படியே ரயிலை விருதுநகர் சந்திப்பு வரை இயக்கிச் சென்றார்.

ஆனால், அவருக்கு மயிலால் ஏற்பட்ட காயத்தினால் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து விருதுநகரில் ரயிலை நிறுத்திய அவர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பிறகு மாற்று டிரைவர் வந்த பின்பு விருதுநகரிலிருந்து 2 மணி நேரம் கழித்து ரெயில் புறப்பட்டுச் சென்றது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X