சென்னை வந்த சரக்கு விமானத்தில் கிரனைட் குண்டு
சென்னை:
இங்கிலாந்தில் இருந்து மலேசியா வழியாக சென்னை வந்த சரக்கு விமானத்தின் ஒரு பார்சலில் கிரனைட் குண்டு இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமான நிலையத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
அந்த குண்டை வெடிகுண்டு நிபுணர்கள் அப்புறப்படுத்தி சோதனையிட்டபோது, அதில் வெடி மருந்து இல்லை என்பதும்,காலியான குண்டு மட்டுமே இருந்தது தெரியவந்தது. ஆனால், எதற்காக இந்த குண்டு விமானத்தில் வந்தது என்பது குறித்து தீவிரவிசாரணை நடந்து வருகிறது.கார்கோ லக்ஸ் என்ற அந்த விமானம் நேற்று பிற்பகலில் சென்னை விமான நிலையம் வந்தது. அதிலிருந்த சரக்குகள்இறக்கப்பட்டன.
அதில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு 6 ரசாயணப் பெட்டிகள் அடங்கிய பார்சல்கள் இருந்தன. அவைஇறக்கப்பட்டபோது அதில் இருந்த ஒரு சிறிய பார்சல் குறித்து விமான நிலைய ஊழியர்கள் இருவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினருக்கு அவர்கள் தகவல் தந்தனர். அவர்கள் வந்து அதை அப்புறப்படுத்திபாதுகாப்பான இடத்தில் வைத்து பிரித்துப் பார்த்தபோது அதில் கையெறி குண்டு இருந்தது.
அதை சோதனையிட்டபோது அது காலி குண்டு என்பது உறுதியானது. இதையடுத்து அதை அனுப்பியது யார் என்று விசாரணைநடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications