ஈராக்கில் தொடர் கார் குண்டு தாக்குதல்: 100 பேர் பலி
பாக்தாத்:
ஈராக்கில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 100 பேர் பலியாயினர்.
அமெரிக்க படைகளுக்கு எதிராகவும் புதிய ஆட்சிக்கு எதிராகவும் ஷியா முஸ்லிம் பிரிவினருக்கு எதிராகவும் சதாம் உசேன்ஆதரவு தீவிரவாதிகள் தொடர்ந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.நேற்று பாக்தாத் நகரின் வடகிழக்கு பகுதியில் உள்ள கானாகின் என்ற இடத்தில் ஷியா முஸ்லிம்களின் மசூதியின் சுவர் மீதுதீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தினார்கள். மசூதியின் சுவர் மீது வெடிகுண்டு கார் மோதியதில் அந்த மசூதி இடிந்தது.அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த பலர் உடல் சிதறி பலியானார்கள்.
அடுத்தடுத்து நடந்த இந்த வெடிகுண்டு தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. பெண்கள்மற்றும் குழந்தைகள் இதில் உடல் சிதறி பலியானார்கள். 200க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. பூகம்பத்தில் இடிந்து வழவது போலகட்டிடங்கள் சரிந்து விழுந்தன. நுற்றுக்கணக்கான கார்களும் தீ பிடித்து எரிந்தன. பாக்தாத் நகரமே எரிவது போல் காட்சிஅளித்தது.












Click it and Unblock the Notifications