For Daily Alerts
Just In
இந்தியா-மியான்மர் எல்லையில் நிலநடுக்கம்
டெல்லி:
இந்திய- மியான்மர் எல்லையில் நேற்றிரவு 12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
காஷ்மீர், பாகிஸ்தானில் கடந்த அக்டோபர் மாதம் 8ம் தேதி பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள்பலியானார்கள். இதையடுத்து அங்கு நில அதிர்வுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய- மியான்மர் எல்லையில் நில நடுக்கம் ஏற்பட்டது. தற்போது அங்குமீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு 12 மணியளவில் நிலநிடுக்கம் இந்திய-மியான்மர் எல்லையில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்5.1 ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவின் மேகாலயா, அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பூமத்திய ரேகைக்கு வடக்கே27.1 டிகிரியிலும், கிழக்கே 96.3 டிகிரியிலும் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் ஏதுமில்லை.
Comments
Story first published: Saturday, November 19, 2005, 5:30 [IST]