வெள்ள நிவாரணம்: கூட்ட நெரிசல்; நெஞ்சு வலி---வாலிபர் பலி
சென்னை:
சென்னை மயிலாப்பூரில் இன்று வெள்ள நிவாரண உதவி கூட்டத்தில் சிக்கிய ஒரு வாலிபர் நெஞ்சு வலி ஏற்பட்டு பலியானார்.
சென்னையில் சமீபத்தில் பெய்த பலத்த மழைக்கு சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தமிழக அரசு நிவாரணஉதவிகளை வழங்கி வருகிறது. ரூ.2,000 ரொக்கம், 10 கிலோ அரிசி, மற்றும் வேட்டி-சேலை கொடுக்கப்படுகிறது.மயிலாப்பூர், திருவல்லிக்கேணி வட்டங்களில் இன்றும், நாளையும் நிவாரண உதவி வழங்கப்படுகிறது. இதற்கான பணி இன்றுகாலை தொடங்கியது.
சமீபத்தில் வியாசர்பாடியில் நிவாரண உதவி பெற குவிந்த கூட்டத்தில் சிக்கி 6 பெண்கள் பலியானார்கள். அது போன்ற விபரீதம்எதுவும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதிகளில் 100 ரேஷன் கடைகளில் விரிவானஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மயிலாப்பூர் காரனேசன் கோவில் தெருவில் உள்ள ரேசன் கடையில் வெள்ள நிவாரண உதவி இன்று வழங்கப்பட்டது. உதவியைபெற ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்றனர்.
அப்போது திடீரென தள்ளு-முள்ளு ஏற்பட்டது.இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் நீண்ட நேரம் நின்ற காரணத்தால் கருணாகரன்(வயது 35) என்பவர் நெஞ்சு வலிப்பதாக கூறினார். மேலும் நெரிசல்காரணமாக மயக்கம் வருவதாகவும் அருகில் இருந்த தன் தம்பியிடம் கூறினார்.
இதையடுத்து சில பேர் அவரை அம்பேத்கார் பாலம் லூர்துபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார்மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது பற்றி மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications