அமெரிக்காவுக்கு பறந்தார் சுஹாசினி
சென்னை:
சுஹாசினி தன் மீது குவிந்து வரும் வழக்குகளில் இருந்து தப்பித்துக்கொள்ள அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு வைத்து கொள்வதில் தவறில்லை என்று நடிகை குஷ்பு சொன்ன கருத்துக்கு தமிழ்நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அந்த பிரச்சினை அடங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நடிகை சுஹாசினி தமிழர்களுக்குஎதிரகவும் குஷ்புவுக்கு ஆதரவாகவும் தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்து இருக்கிறது என்று கருத்து வெளியிட்டார்.
தமிழினத்தையே அவமானப்படுத்தும் வகையில் அவரது பேச்சு இருந்ததால் தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் பல்வேறுநீதிமன்றங்களில் சுஹாசினிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து வருகிறார்கள்.
சுஹாசினிக்கு எதிராக கரூர் நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தொடரப்பட்டன. அதன் பிறகு ஈரோடு, வாலாஜபேட்டை, திருச்சி,எழும்பூர், நாமக்கல், திருப்பூர் ஆகிய ஊர்களில் உள்ள நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன.
நேற்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் நீதிமன்றத்திலும், திண்டுக்கல் 3வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்நீதிமன்றத்திலும் சுஹாசினி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே இன்று தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் பாமக சார்பில் சுஹாசினி மீது மேலும் ஒருவழக்கு போடப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
முதல் கட்டமாக ஈரோடு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் டிசம்பர் 5ம் தேதி நேரில் ஆஜராக சுஹாசினிக்கு சம்மன்அனுப்பப்பட்டுள்ளது. ஆஜராகவில்லையெனில் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படும்.
தனக்கு எதிராக குவியும் வழக்குகளை கண்டு மலைத்து போய் உள்ள சுஹாசினி தமிழ்நாட்டில் எங்கும் செல்ல முடியாத நிலைஏற்பட்டுள்ளது. மேலும் சென்னையில் தங்கியிருப்பது நல்லதல்ல என்று அவர் குடும்பத்தினர் சொன்னார்களாம்.
இதை ஏற்றுக் கொண்ட சுஹாசினி மிக ரகசியமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது.ஹைதராபாத்தில் நடந்த ஒரு விழாவுக்கு சென்றவர் அப்படியே அங்கிருந்து அமெரிக்காவுக்கு விமானத்தில் எஸ்கேப்ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவில் அவர் எங்கு தங்கியிருக்கிறார் என்பதை அறிய அவரது உதவியாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு,தனக்கு எதுவும் தெரியாது. ஆனால் இப்போது சென்னையில் அவர் இல்லை. திங்கட்கிழமை திரும்பிவிடுவார் என்றார்.
ஆனால் நீதிமன்றத்தில் இருந்து வரும் சம்மன் உத்தரவை கையெழுத்திட்டு பெறுவதை தவிர்க்கவே அவர் அமெரிக்காவில்தஞ்சம் அடைந்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் சொல்கின்றன.
இது பற்றி பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் மூத்த தலைவர்களிடம் கேட்ட போது தமிழர்களை அவமானப்படுத்தியசுஹாசினி எங்கு போனாலும் தப்ப முடியாது. சம்மனை அவர் சார்பில் யாரும் வாங்காவிட்டால் அவர் வீட்டு கதவில் ஒட்டமுடியும். அதன் பேரில் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்க முடியும் என்றனர்.
எனவே சுஹாசினி விவகாரத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications