புயல் வலுவடைகிறது: தமிழகத்தில் கனமழை பெய்யும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழத்த தாழ்வு வலுவடைந்துள்ளதை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைபெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. ஏற்கனவே, நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இதனால் தென் தமிழகத்தில் மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் பலத்தகாற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.இதன் காரணமாக தமிழகம், புதுவையில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் கனமழை தொடங்கும் வாய்ப்புகள்உள்ளன.
ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, காரைக்கால்பகுதிகளிலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யவும்வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications