ஜெ.மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஜனவரிக்கு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதா மீதான பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, மாநிலங்களவை உறுப்பினர் தினகரன் மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதானசொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்குடன் தினகரன் மீதான லண்டன் ஹோட்டல் வழக்கையும் சேர்த்து விசாரிக்க பெங்களூர் சிறப்பு நீதிமன்றம்உத்தரவிட்டது.

இதை எதிர்த்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதையடுத்து பெங்களூர்சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி ஏ.எஸ் பச்சாபுரே முன்பு விாரணைக்கு வந்தது.அப்போது அரசு வழக்கறிஞர் வி.எஸ். ஆச்சார்யாவைப் பார்த்து உச்சநீதிமன்றத்தில் உள்ள இவ்வழக்கு விசாரணை குறித்துகேட்டார்.

உச்சநீதிமன்றத்தில் அன்பழகன் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளதாக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாதெரிவித்தார்.

இதையடுத்து சிறப்பு நீதிமன்ற விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு நீதிபதி பச்சாபுரே ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+