For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன்: இலங்கை அதிபர் ராஜபக்ஷே

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

விடுதலைப்புலிகளுடன் சமாதான பேச்சு நடத்துவேன் என்றும் அதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் இலங்கையின் புதியஅதிபர் ராஜபக்ஷே கூறியுள்ளார்.

இலங்கை நாட்டின் 5வது புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜபக்ஷே நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்குதலைமை நீதிபதி சரத் சில்வா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்றதும் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். சிங்கள மொழியில் அவர் ஆற்றிய உரையை ஒருவர் தமிழில் மொழிபெயர்த்துக் கூறினார்.

மக்களுக்கு ஆற்றிய உரையில் ராஜ்பக்ஷே கூறியதாவது:

விடுதலைப்புலிகளுடன் சமாதான பேச்சு நடத்தத் தயாராக இருக்கிறேன். புதிய இலங்கையை உருவாக்க வேண்டும் என்பது தான்எனது லட்சியம். அதை அடைய இப்போதே எனது பணியைத் தொடங்குகிறேன்.

இலங்கையில் அமைதி நிலைக்கச் செய்வேன். அதற்காக விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்தத் தயாராக உள்ளேன். அவர்கள்எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறார்களோ, அப்போதே அவர்களுடன் பேசத் தொடங்கி விடுவோம்.பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிப்போம்.

போர் நிறுத்த உடன்படிக்கையை பின்பற்ற உறுதிகொள்ளும் அதே நேரத்தில் அந்த உடன்படிக்கையை மறு ஆய்வு செய்வேன்.போர் நிறுத்தம் அமலில் இருந்த போதிலும் வன்முறைச் சம்பவங்களும் சிறுவர்கள் கடத்தப்படுவதும் தினசரி நிகழ்வுகள்ஆகிவிட்டன.

எனவே போர் நிறுத்த உடன்படிக்கை மறுஆய்வு செய்யப்படும். நாடு ஒன்றாக இருக்க பாடுபடுவேன். நாம் ஆசிய கண்டத்தில்இருக்கிறோம். எனவே, சமாதானப் பணிகளுக்கு உதவிய ஆசிய நாடுகளுடன் ஆலோசனை நடத்துவேன். பிற உலகநாடுகளுடனும் ஆலோசனை நடத்துவேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X