For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ஜகார்த்தா:

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மக்கள் சுனாமி பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர்.

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் அதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமிபேரலைகள் இந்தியா உள்பட 13 நாடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இதில்பலியானார்கள்.

இந்த நிலையில் நேற்றிரவு சுமத்ரா தீவுப்பகுதியில் கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர்அளவில் 6.5 புள்ளிகளாக பதிவானது.

கடலுக்கு அடியில் 30 கிலோமீட்டர் அடித்தளத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள சீனாபாங் பகுதியில் இது மையம்கொண்டிருந்தது. இதனால் சுனாமி பேரலைகள் எழக்கூடும் என்று மக்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால் அதுபோல்அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

இதே போல் அந்தமானிலும் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி பீதியில் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேஓடினார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X