For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்களிடம் பூமராங் ஆன போலீஸ் மிரட்டல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வெள்ள நிவாரண உதவிகள் வழங்குவதில் தமிழகம் முழுவதுமே தொடர்ந்து குழப்பங்கள் நடந்து வருவதால் போராட்டங்களும்தொடர்ந்து வருகின்றன.

பல இடங்களில் மறியல், சாலை மறியல், தர்ணா என ஆண்களும் பெண்களும் போராட்டங்களை நடத்தியபடி உள்ளனர். இந்நிலையில் சென்னை பொன்னேரி அருகே போராட்டம் நடத்திய பெண்களை போலீசார் கைது செய்துவிடுவதாகக் கூறி மிரட்டினர்.

ஆனால், இந்த மிரட்டல் போலீசாருக்கே பூமராங்ஆகிவிட மக்களிடம் கெஞ்ச வேண்டிய நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டனர்.

இந்தப் பகுதியில் போராட்டம் நடத்திய பொது மக்கள் அரசு பஸ்களை சிறை பிடித்தனர். தங்களுக்கு நிவாரணம் கிடைத்தால் தான்பஸ்களை விடுவோம் என்றனர். இதையடுத்து வீடியோகிராபர் சகிதம் வந்திறங்கிய போலீசார், பெண்களை படம் எடுத்தனர்.

மரியாதையாகக் கலைந்து செல்ல வேண்டும் இல்லாவிட்டால், உங்கள் அனைவர் மீதும் வழக்குப் பாயும். எல்லோரையும் பிடித்துசிறையில் அடைப்போம். அனைவரையும் படம் பிடித்துவிட்டோம். இதனால் சட்டச் சிக்கலுக்கு ஆளாவீர்கள் என போலீசார்மிரட்டினர்.

இதனால் கடுப்பான பொது மக்கள், மரியாதையா இப்பவே எங்க எல்லாரையும் கைது செய்யனும். சிறையில் அடைக்கனும்.இல்லாட்டி நடக்கிறதே வேற என்று கூறியபடி அங்கு நின்றிருந்த போலீஸ் வேன்களிலும் சிறை பிடிக்கப்பட்ட பஸ்களிலும் ஏறிஉட்கார்ந்துவிட்டனர்.

அவர்களை போலீசார் தடுத்தும் கேட்காமல் வண்டிகளில் ஏறினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் கெஞ்ச ஆரம்பித்தனர்.சும்மா சொன்னோம்மா.. இறங்குங்க.. அம்மா இறங்குங்க.. என போலீசார் கெஞ்ச, நீண்ட நேரத்துக்குப் பின்னரே பெண்கள்இறங்கினர்.

இதையடுத்து போலீசார் அங்கிருந்து அகன்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X