குஷ்பு.. செக்ஸ்.. குஷ்பு...: வெளிநடப்பு செய்த சானியா
கொச்சி:
![]() |
டெல்லியில் நடந்த கூட்டத்தில் சானியாவிடம் இது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது, திருமணத்துக்கு முன்போ பின்போஎப்போது செக்ஸ் வைத்துக் கொண்டாலும் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என பதில் தந்தார் சானியா.
எப்போது செக்ஸ் வைத்துக் கொள்வது என்பதை அவரவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
கிட்டத்தட்ட குஷ்புவின் கருத்தையே அப்படியே பிரதிபலித்த சானியாவுக்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அவருக்கு எதிராகஆந்திராவில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந் நிலையில் தனது கருத்து திரிக்கப்பட்டதாகவும், தான் அவ்வாறு பேசவில்லை என்றும் அறிக்கை விட்டார் சானியா.
இதற்கிடையே நேற்று மலபார் கோல்ட் நகைக் கடை விளம்பரத்துக்காக கேரளாவுக்கு வந்த சானியா கொச்சியில் நிருபர்களைச்சந்தித்தார். மகிழ்ச்சியாக பதிலளித்துக் கொண்டிருந்த அவரிடம் குஷ்புவின் செக்ஸ் பேச்சு குறித்து கருத்து கேட்கப்பட்டது.இதனால் கடுப்பான சானியா, இது தொடர்பாக நான் ஏற்கனவே விளக்க அறிக்கை வெளியிட்டுவிட்டேன். ஏன் மீண்டும் மீண்டும்அதையே கேட்கிறீர்கள். இதற்கு மேல் அந்த விஷயத்தில் நான் ஏதும் சொல்வதாக இல்லை என்று சொல்லிவிட்டு கூட்டத்தில்இருந்து கடும் கோபத்துடன் வெளிநடப்பு செய்தார்.
அவரை நிருபர்கள் தொடர்ந்து சென்று கேள்விகள் எழுப்பியபோது, மலபார் கோல்ட் நகைக் கடை தொடர்பாக மட்டுமே பதில்சொல்ல நான் வந்தேன். அதற்கு மேல் ஏதும் பேச மாட்டேன் என்று கூறிவிட்டு காரில் ஏறிப் போய்விட்டார்.
இதனால் கடுப்படைந்த நிருபர்களை கூட்டத்தில் இருந்த நடிகர் மோகன் லால் சமாதானப்படுத்தினார். இவரும் மலபார் கோல்ட்நிறுவனத்திற்கு விளம்பரம் செய்து வருகிறார்.













Click it and Unblock the Notifications