திசை மாறிய புயல்: தூத்துக்குடி-தொண்டி இடையே கரையை கடக்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வங்கக் கடலில் ராமேஸ்வரத்துக்குக் கிழக்கே உருவான புயல் சின்னம் வலுவடைந்து வேகமாக கரை நோக்கி நகர்ந்து வருகிறது.இந்தப் புயல் தூத்துக்குடி- தொண்டி இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

முன்னதாக புயல் நாகப்பட்டிணம்-பாம்பன் இடையே நேற்றிரவு அல்லது இன்று காலை கரையைக் கடக்கும் எனஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அது இன்று தொண்டி-தூத்துக்குடி இடையே கரையைக்கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 250 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த இந்தப் புயல் இன்று காலை 5 மணி நிலவரப்படி ராமேஸ்வரம்மாவட்டம் பாம்பனில் இருந்து கிழக்கு-தென் கிழக்கே 200 கி.மீ. தொலைவை நெருங்கியது. பகல் 12.30 மணியளவில் அதுமேற்குப் பக்கமாக நகர்ந்து கரையிலிருந்து 100 கி.மீ. தூரத்தை நெருங்கிவிட்டது.

இதே திசையில் புயல் சின்னம் பயணித்தால் தொண்டி-தூத்துக்குடி இடையே பிற்பகலில் அது கரையைக் கடக்கும் என வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் மேலும் அதிகமான கன மழையும், பயங்கர புயல் காற்றும் வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயல் சின்னத்தால் கடந்த 3 நாட்களாகவே தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இப்போது புயல் கரையைக்கடப்பதால் மேலும் அதிகமான மழை பெய்யும். மணிக்கு சுமார் 60 கி.மீ. வேகத்தில் தரைக் காற்று வீசும் என்றும்எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் பலத்த சூறாவளியால் பெரும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு வருகிறது. அலைகள் சுமார் 13 அடி உயரம் வரை உயர்ந்துஅந்தப் பகுதியையே நடுக்கத்தில் ஆழ்த்தின. பலத்த ஓசையுடன் எழுந்த ராட்சத அலைகள் கரைகளையும் தாண்டி வசிப்பிடங்கள்வரை வந்து சென்றன. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பீதி பரவியுள்ளது.

பலத்த காற்றாலும் அலைகளாலும் தேவனாம்பட்டினம், தாழங்குடா, அக்கரைக்கோரி, சிங்காரத்தோப்பு ஆகிய இடங்ளில்கரையோரத்தில் இருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாயந்தன.

வேதாரண்யத்தில் தான் அதிகபட்சமாக 90 மிமீ மழை பெய்துள்ளது.

நாகப்பட்டிணம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் புயல் எச்சரிக்கைக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. கன மழை மற்றும் புயல்காரணமாக நாகை, சென்னை, தஞ்சாவூர், கடலூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்குவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்யும் மழையால் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+