கோமதி செக்ஸ் புகார்: தளவாய் மனு தள்ளுபடி
சென்னை:
டாக்டர் கோமதி செக்ஸ் புகார் வழக்கில் என் மீதான குறுக்கு விசாரணையை நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் தளவாய் சுந்தரம்தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் மீது சென்னை டாக்டர் கோமதி செக்ஸ் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். பிறகு இது குறித்துசிபிஐ விசாரிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் கோமதி வழக்கு தொடர்ந்தார்.இதை விசாரித்த நீதிபதி கே.பி. சிவசுப்பிரமணியம், டாக்டரின் புகார் பற்றி விசாரித்து அரசுக்கு அறிக்கை தர ஓய்வு பெற்ற நீதிபதிமருதமுத்துவை நியமித்தார். இவரின் தலைமையிலான கமிட்டி முன்பு கோமதி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இந் நிலையில் தமிழகத்தில் இந்த விசாரணை நடந்தால் தனக்கு நியாயம் கிடைக்காது என்று கூறி ஜனாதிபதிக்கு டாக்டர் கோமதிமனு அனுப்பினார்.
இதையடுத்து தன் மீதான விசாரணையை முடித்துக் கொள்ள வேண்டும் என்று தளவாய் சுந்தரம் சார்பில் நீதிபதி மருதமுத்துகமிட்டியில் அதிமுக எம்பியும் வழக்கறிஞருமான ஜோதி மனு செய்தார்.
அந்த மனுவில், டாக்டர் கோமதி தற்போது நீதித்துறையின் மீதே குற்றம் சாட்டி ஜனாதிபதிக்கு மனு அனுப்பியுள்ளார். எனவேகமிட்டி தனது விசாரணையை முடித்துக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.
ஆனால், விசாரணை பாதிக்கு மேல் முடிந்துவிட்டது. தற்போது குறுக்கு விசாரணை செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில்விசாரணையை நிறுத்த முடியாது என்று கூறி தளவாய் சுந்தரத்தின் மனுவை நீதிபதி நிராகரித்தார்.












Click it and Unblock the Notifications