சென்னை உயர்நீதிமன்றதுக்கு 6 புதிய நீதிபதிகள்
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 6 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி அப்துல் கலாம் உத்தரவிட்டுள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் 49 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 22 நீதிபதிகளே உள்ளனர். தலைமை நீதிபதியாகமார்க்கண்டேய கட்ஜூ இருந்தபோது புதிய நீதிபதியாக நியமிக்க 17 நீதிபதிகளின் பெயர் பட்டியலை உச்ச நீதிமன்றத்துக்குஅனுப்பி வைத்தார்.அதில் 6 நீதிபதிகளைத் தேர்வு செய்து அந்தப் பட்டியலை உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் சமர்பித்தது. ஆனால், 3 மாதங்களுக்குமேல் ஆகியும் நீதிபதிகள் நியமிக்கப்படவில்லை. இதையடுத்து நீதிபதிகளை நியமிக்காதது ஏன் என்று உச்சநீதிமன்றம் மத்தியஅரசுக்கு கண்டனம் தெரிவித்தது.
இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று 6 புதிய நீதிபதிகளை மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்கான உத்தரவைஜனாதிபதி அப்துல் கலாம் பிறப்பித்தார். அவர்களின் பெயர் விவரம் வருமாறு:
சென்னை உயர்நீதிமன்ற ஜெனரல் ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன், சென்னை முதன்மை செசன்ஸ் நீதிபதி முருகேசன், மாவட்டநீதிபதி தமிழ்வாணன், சட்டபணி ஆணையச் செயலாளர் ஜெயபால், வழக்கறிஞர் மோகன்ராம், வழக்கறிஞர் தனபாலன் ஆகியோர்
இவர்கள் வெள்ளிக்கிழமை பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின்எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் மேலும் 21 இடங்கள் காலியாகவே உள்ளன.