தூத்துகுடியில் புதிய மின் நிலையம்: என்எல்சி-தமிழக அரசு கூட்டு முயற்சி

Subscribe to Oneindia Tamil

நெய்வேலி:

நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனமும், தமிழக மின்வாரியமும் இணைந்து என்எல்சி-தமிழ்நாடு மின் நிறுவனம்என்ற பெயரில் புதிய பொதுத்துறை நிறுவனத்தை துவக்கியுள்ளது.

புதிதாக தொடங்கப்பட்ட இந் நிறுவனம் தூத்துக்குடியில் அமைக்கப்படவுள்ள 1,000 மெகாவாட் திறனுள்ள அனல்மின் நிலையத்திற்காக பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

என்எல்சி நிறுவனமும், தமிழக மின் வாரியமும் இணைந்து ரூ. 4,500 கோடி மதிப்பில் தூத்துக்குடியில் நிலக்கரியின்மூலம் இயங்கும் 1,000 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்தினை அமைக்கவுள்ளன.

இதற்கு தேவைப்படும் ஒரு ஆண்டிற்கான 50 லட்சம் டன்கள் நிலக்கரி ஒரிஸ்ஸா மாநிலம் தால்ச்சர் சுரங்கத்தில்இருந்து எடுத்து வரப்படவுள்ளது.

இத்திட்டத்திற்காக மூலதனத்தில் என்எல்சி 89 சதவிகிதமும், தமிழக மின்வாரியம் 11 சதவிகிதமும் வழங்கியுள்ளன.நிதி ஆதாரத்தைப் பொறுத்தவரை இந் நிறுவனங்களின் சொந்த நிதி மற்றும் கடன் தொகைகள் திரட்டப்படுவதன்மூலம் பெறப்படும்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி, மத்திய மின்சக்தி அமைச்சகம் நிர்ணயித்துள்ள அளவுகளின் படி தமிழகம்,கர்நாடகம், கேரளா, புதுவை உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும்.

இவற்றில் பெரும்பாலான அளவு தமிழகத்திற்கு வழங்கப்படும். எதிர்வரும் 2010- 2011ம் நிதியாண்டில் இப்புதியதிட்டம் மின் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+