50 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வரும் செளதி மன்னர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வரும் ஆண்டு குடியரசு தின விழாவில் அரசின் சிறப்பு விருந்தினராக செளதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் கலந்துகொள்கிறார்.குடியரசு தினத்தின் ராணுவ அணிவகுப்பை ஜனாதிபதி கலாம், பிரதமர் மன்மோகன் சிங்குடன் அவர் நேரில் பார்வையிடுவார்.
கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருகை தரும் முதல் செளதி மன்னர் அஜீஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக1955ம் ஆண்டில் தான் அப்போதையே மன்னர் செளத் இந்திவுக்கு வந்தார்.
இந்தியப் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு 1956லும் இந்திரா காந்தி 1982லும் செளதிக்குச் சென்றனர். அதன் பின்னர் நம் நாட்டுத்தலைவர்கள் யாரும் அங்கு செல்லவில்லை.
இந்தியாவுக்கு அதிகபட்சமாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு செளதி அரேபியா. அங்கு சுமார் 15 லட்சம் இந்தியர்கள்பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications