சென்னை துறைமுகத்தில் சிபிஐ அதிரடி ரெய்டு: 2 ஊழல் அதிகாரிகள் சிக்கினர்
சென்னை:
சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்திலும் அதன் அதிகாரிகளின் வீடுகளிலும் சிபிஐ அதிரடி ரெய்ட் நடத்தியது.
நாடு முழுவதும் துறைமுகங்கள், நிலக்கரி சுரங்கங்கள், கப்பல் சரக்கு ஏற்றி இறக்கும் மையங்கள், அவற்றின் அலுவலகங்கள்,அதிகாரிகளின் வீடுகள் என 33 இடங்களில் இந்த சோதனைகள் நடந்தன.ஊழல், லஞ்சம், முறைகேடுகளில் ஈடுபட்டதாக 14 அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சிபிஐ நடத்திய இந்தரெய்டில் பல அதிர்ச்சிகரமான விவரங்கள் வெளியாகியுள்ளன.
சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் செயற் பொறியாளர் ஒருவர் தனது மாமனாரின் பெயரில் ஒரு போலியானநிறுவனத்தைத் துவக்கி, அதற்கு ரூ. 33 லட்சம் மதிப்புள்ள காண்ட்ராக்ட்களை வழங்கியுள்ளார்.
பின்னர் அந்தப் பணத்தை மாமனார் தந்த பரிசு என்ற பெயரில் தனது வங்கிக் கணக்குக்கு திருப்பி விட்டுள்ளார். இந்த திருட்டுசெயற்பொறியாளர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
அதே போல சென்னை பொறுப்புக் கழகத்தின் ஹார்பர் மாஸ்டர் தனது வருமானத்தை மீறி அரசியல்வாதிகளை விடவும் பெரும்அளவில் சொத்து சேர்த்துள்ளார். இந்த பிராடு மாஸ்டரின் வீட்டிலும் அலுவலகத்திலும் சிபிஐ ரெய்ட் நடத்தி பல்வேறு சொத்துப்பத்திரங்களை பறிமுதல் செய்தது.
இவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, தூத்துக்குடி, கோயம்புத்தூர், திருப்பூர், வாணியம்பாடி ஆகிய இடங்களில் உள்ள துறைமுகப் பொறுப்புக்கழகத்தின் சரக்குக் கிட்டங்களிலும், சரக்கு ஏற்றி இறக்கும் மையங்களிலும் சோதனைகள் நடந்தன.
இங்கும் பல்வேறு ஏற்றுமதிகளுக்கு முறைகேடான வகையில் வரி விலக்கு அளிக்கப்பட்டதும், அதற்காக அதிகாரிகளுக்குலட்சக்கணக்கில் லஞ்சம் தரப்பட்டு வந்த விவரத்தையும் சிபிஐ கண்டுபிடித்துள்ளது.
அவை தவிர மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய துறைமுகங்களிலும், நாக்பூர்,சம்பல்பூர், ராஞ்சி, அஸனால், பிலாஸ்பூர், தான்பாத் ஆகிய இடங்களில் உள்ள நிலக்கரி சுரங்களிலும், பெங்களூர், ஹைதராபாத்ஆகிய நகர்களில் உள்ள சரக்கு மையங்களிலும், அவற்றின் அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு பல்வேறுமுறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications