சுஹாசினி-: வழக்கை சந்திப்போம்- சாருஹாசன்
சென்னை:
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
குஷ்புவும், சுகஹாசினியும் கற்பு பற்றி சொன்ன கருத்து தவறல்ல. இங்கே ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்பது தான்எழுதப்படாத விதியாக இருக்கிறது. குஷ்பு கருத்தை கருத்தாக எதிர் கொள்வது தான் முறை. அதை விட்டு துடைப்பத்தால்எதிர்கொள்கிறார்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை வைத்திருப்பவர், ஒருவர் என் மனைவி, இன்னொருவர் என் தோழி என்கிறார். ஒரு பெண்ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களோடு தொடர்பு வைத்திருந்தால் ஒருவன் என் கணவன், இன்னொருவன் என் தோழன் என்று சொல்லமுடியுமா? ஒழுக்கம் என்றாலும், ஒழுங்கீனம் என்றாலும் அது இருவருக்கும் தான்.
ஒருவன் மனைவியோடு இன்னொருவன் தொடர்பு கொண்டாலும் யாராலும் அதை தடுக்க முடியாது. அப்படி விரும்பி உடலுறவுகொண்டாலும் அது காதல் தான். கள்ளக்காதலென்று வேண்டுமானால் கலாச்சாரம் சொல்லலாம்.
விருப்பமில்லாமல் அத்துமீறி வன்முறையாக நடந்து கொண்டால் தான் சட்டத்தின்படி தண்டிக்க முடியும். இந்த உண்மைகளைசொன்னால் கலாச்சாரத்தின் பேரில் வன்முறையை திணிக்கிறார்கள்.
மன்னிப்பு கேட்டவரை செருப்பு துடைப்பத்தோடு போய் நீதமன்ற வாசலில் அடிப்பது தான் கலாச்சாரமா?சுஹாசினி பேசியதில் தவறு இல்லை. அன்று பேசிவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் ஏன் இப்படி பேசினாய் என்று நான் கேட்டேன்.என்னிடம் வருத்தம் தெரிவித்தார்.
தங்கர்பச்சான் விஷயத்திலும் குஷ்பு விஷயத்திலும் நடிகர் சங்கம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. குஷ்புவை நடிகர் சங்கம்பலி கடவாக்கி விட்டது. சரத்குமாருக்கு சுஹாசினி எஸ்எம்எஸ் அனுப்பியது தவறு, இதில் சரத்குமார் பக்கம் நியாயம் இருக்கிறது.
குஷ்பு விஷயத்தில் அமைதியாக இருந்து விட்டோம். தங்கர்பச்சான் விஷயத்தில் தவறு செய்து விட்டோம். சிலரைதிருப்திபடுத்தியாக வேண்டும் என்று தான் சுஹாசினிக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது.
சுஹாசினி பொது மன்னிப்பு ஏன் கேட்கவில்லை என்கிறார்கள். மன்னிப்பு கேட்ட குஷ்புவையே தாக்கியதால் தான் சுஹாசினிகேட்கவில்லை. சுஹாசினி மீதான வழக்குகளை நீதிமன்றத்தில் முறையாக சந்திப்போம் என்றார் கமலஹாசனின் அண்ணனானசாருஹாசன்.