ஜெர்மனி: தமிழ் பெண்ணை கொலை செய்த தமிழர்
Subscribe to Oneindia Tamil
பெர்லின்:
ஜெர்மனியில் தேவாலயம் ஒன்றில் தமிழ்ப் பெண்னைக் கொலை செய்த இலங்கைத் தமிழர் மீதான வழக்கு விசாரணை வரும் 30ம்தேதி தொடங்குகிறது.
பெர்லின் நகரின் ஸ்டர்ட்கார்ட் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழ் வழிபாடு நடந்து கொண்டிருந்தது. இதில் சுமார் 65இலங்கைத் தமிழர்கள் பங்கேற்றிருந்தனர்.அப்போது வாளுடன் உள்ளே நுழைந்த தமிழ் வாலிபர் ஒருவர் அங்கிருந்த 43 வயது தமிழ்ப் பெண்ணை வெட்டிக் கொலைசெய்தார். சமுராய் வாளுடன் அவர் நடத்திய தாக்குதலில் மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
தனக்கு பெண் கொடுத்த மறுத்ததால் ஒரு குடும்பத்தினரைக் குறி வைத்து அவர் அந்தத் தாக்குதலை நடத்தினார்.
இப்போது சிறையில் உள்ள அவர் மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்ததால், அவரை மன நோயாளிகள் மையத்தில்அடைக்க ஸ்டர்ட்கார்ட் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந் நிலையில் தேவாலயத்தில் அவர் நடத்திய கொலை வழக்கு விசாரணைஅடுத்த வாரம் தொடங்கவுள்ளது.












Click it and Unblock the Notifications