ஆப்கான்: கேரள டிரைவரை கொன்ற தலிபான்கள்
டெல்லி:
கடத்தப்பட்ட இந்தியரை கொன்று விட்டோம் என்று தலிபான் தீவிரவாதிகள் அறித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 4 தொழிலாளர்களை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.அவர்களில் கேரளாவைச் சேர்ந்த மணியப்பன் குட்டி என்ற டிரைவரும் ஒருவர்.இந்திய எல்லைப் பகுதி சாலை அமைப்பு நிறுவனத்தில் குட்டி பணிபுரிந்து வந்தார். சாலை அமைக்கும் பணிக்காகஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டார்.
இவர் உள்பட 4 பேரை கடத்தி சென்ற தீவிரவாதிகள் 48 மணி நேரத்துக்குள் அந்த நிறுவனம் ஆப்பானிஸ்தானை விட்டுவெளியேறாவிட்டால் டிரைவர் குட்டியை கொலை செய்து விடுவோம் என்று அறிவித்திருந்தனர்.
ஆப்கான் அரசு உதவியுடன் குட்டியை மீட்க மத்திய அரசு அனைத்து நடவடிக்களையும் எடுத்து வந்தது. இதற்கிடையே தலிபான்தீவிரவாதிகள் விதித்த கெடு நேற்ற மாலையுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் குட்டியை சுட்டுக் கொன்றுவிட்டதாக தீவிரவாதிகள் அறிவித்தனர். இது தொடர்பாக தலிபான் செய்திதொடர்பாளர் யூசுப் அகமது கூறியதாவது:
இந்திய எல்லைப்புற சாலை நிறுவனம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற வேண்டும் என்று கெடு விதித்து இருந்தோம். இதுதொடர்பாக யாரும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் நாங்கள் கடத்தி வந்த இந்தியரை துப்பாக்கியால் சுட்டுகொன்று விட்டோம். அவரது உடலை வீசி எறிந்து விட்டோம் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடத்தப்பட்ட கேரள டிரைவர் மணியப்பன் ராமன் குட்டியின் உடல் தெற்கு ஆப்கானிஸ்தானில் சாலையோரத்தில்கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவர் பிணமாக கிடந்தார். தீவிரவாதிகளின் இந்தகொடூர செயலை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.
இதை தொடர்ந்து கடத்தப்பட்ட கேரள டிரைவர் ராமன் குட்டி தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.