அமைச்சர்களை நெளியவைத்த எஸ்எஸ் சந்திரன்
திருச்சி:
மைக்கில் பேசும் அரசியல்வாதிகள் தெரியும். மைக்குடன் பேசும் அரசியல்வாதியைத் தெரியுமா?. அவர் வேறு யாருமல்லஅதிமுக எம்பி எஸ்எஸ் சந்திரன் தான்.
சமீபத்தில் திருச்சியில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய எம்பி எஸ்.எஸ்.சந்திரன் அமைச்சரின் கடந்த காலம் குறித்துப் பேசிஅமைச்சர்களை சங்கடத்தில் நெளிய வைத்தார்.அதிமுகவின் உழவர் பாதுகாப்புத் திட்டம் குறித்து விளக்கவே அந்தக் கூட்டம் நடந்தது. அமைச்சர் ஓ.பி உள்ளிட்ட பலமாண்புமிகுக்கள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் எஸ்.எஸ். சந்திரன் தனது வாயை கோணியபடி பேசியதாவது:
நான் உழவர் பாதுகாப்புத் திட்டம் பத்தியோ, அம்மாவின் சாதனைகள் பற்றியோ இங்கே பேசப் போவதில்லை. 35 ஆண்டு காலம்நான் ஒட்டியிருந்த கருணாநிதியின் நயவஞ்சகத் தன்மையைப் பற்றித் தான் பேசுவேன்.. என்றார்.
இவ்வாறு எஸ்.எஸ். சந்திரன் பேசிக் கொண்டிருந்தபோதே, மைக் மக்கர் செய்ய ஆரம்பித்தது. மைக்கில் க்குயுங்... டொர் என்றுசத்தம் வரவே, ஏய் மைக்கே, ஏன் வைகோவைப் போல எக்கோ அடிக்கிறாய் என்று மைக்கோடு பேசினார் எஸ்எஸ் சந்திரன்.
ஒரு வழியாய் மைக் சரியாகிவிட, தொடர்ந்து கலாய்த்த சந்திரன், நான் திமுகவுல இருந்து விலகினபோது இந்த ராதாரவிப் பயஎன்னை அழைச்சுட்டுப் போயி வைகோகிட்ட விட்டுட்டு ஓடிப் போய்ட்டான். அங்கே தில காலம் இருந்து அவஸ்தைப் பட்டபிறகு உயிர் தப்பினா போதும்னு வெளியேறி அதிமுகவுல சேர்ந்தேன்.
35 வருசமா கருணாநிதி கூட இருந்து கவுன்சிலர் கூட ஆக முடியலை. ஆனா, அம்மாகிட்ட வந்த சில மாதத்திலேயேஎம்பியாகிவிட்டேன்.
நான் மட்டுமா?. இதோ மேடையிலே இருக்காரே அமைச்சர் அண்ணாவி. அவர் என்ன செஞ்சுகிட்டு இருந்தார் தெரியுமா?.பஸ்சுல விசில் அடித்து கண்டக்ரடா இருந்தார். இப்ப எவ்வளவு சொகுசா வாழ்றார் தெரியுமா என்றார்.
அப்போது அண்ணாவி ஒரு பக்கம் நெளிய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்னொரு பக்கம் நெளிந்தார். (இவர் பெரியகுளத்தில்டீக் கடை நடத்தியவர், டீ மாஸ்டரும் இவரே).
இவ்வாறு ஒரு பக்கம் உழவர் நலத் திட்டம் அறிவித்த முதல்வர் ஜெயலலிகாவுக்காக அதிமுகவினர் பொதுக் கூட்டம் நடத்திக்கொண்டருந்த அதே நேரத்தில் விவசாயக் கடன் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள் என்பது தான்சுவாரஸ்யம்.