நிதிஷ் பதவியேற்பு: துணை முதல்வர் பாஜக மோடி
பாட்னா:
![]() |
ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணியில் சார்பில் முதலவராகியுள்ள நிதிஷ் பிகாரின் 33வது முதல்வராவார். பாட்னா காந்திமைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஆளுநர் பூட்டா சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் மாஜி பிரதமர் வாஜ்பாய், பாஜக தலைவர் அத்வானி, துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்தியப் பிரதேசமுதல்வர் பாபுலால் கெளர், உமா பாரதி, அருண் ஜேட்லி, ஷானவாஸ் ஹூசேன், நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்ட பாஜகதலைவர்களும்,
முன்ளாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, அகாலி தளத் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், ஐககிய ஜனதா தள நாடாளுமன்றத்தலைவர் ஷரத் யாதவ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பாஜக அலுவலகத்தில் அடிதடி:
முன்னதாக அமைச்சரவையில் இடம் தரக் கோரி பல மூத்த பாஜக எம்எல்ஏக்களின்
ஆதரவாளர்கள் பாட்னா பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களைத் தடுத்த தலைவர்களை தொண்டர்கள் தாக்கினர்.இதனால் அங்கு அடிதடி நடந்தது.
கைகளில் கம்புகளுடன் வந்த அவர்கள் கட்சி அலுவலகத்தில் புகுந்து கலவரம் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்துநிறுத்தினர்.













Click it and Unblock the Notifications