தமிழக தேர்தல் அதிகாரியின் செக்ஸ் லீலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக தேர்தல் அதிகாரி வை.பழனிச்சாமி மீது அவரது அலுவலக பெண் ஊழியர்கள் செக்ஸ் குற்றச்சாட்டு கூறி கவர்னர்பர்னாலாவிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.

சென்னை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் பணியாற்றும் சித்ராதேவி என்பவர் தன்னுடன் வேலை பார்க்கும் ஊழியர்கள்தேன்மொழி, மைதிலி உள்பட 10 பெண்களுடன் சென்று தமிழக கவர்னர் பர்னாலாவை சந்தித்து தேர்தல் அதிகாரி பழனிச்சாமிமீது செக்ஸ் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து சித்ராதேவியுடன் பணியாற்றும் பெண் ஊழியர்கள் கூறியதாவது:

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்களை நடத்தக்கூடிய மாநில தேர்தல் ஆணைய அதிகாரியாக இருப்பவர் வை.பழனிச்சாமி.சென்னை வடபழனியில் உள்ள இவரது அலுவலகத்துக்கு திண்டுக்கல் மாவட்ட வருவாய்த்துறையில் பணியாற்றிய சித்ராதேவி(வயது 32) என்பவர் தற்காலிக பணி மாறுதலில் வந்தார்.

அவர் மீது கண் வைத்த பழனிச்சாமி, சித்ராதேவியிடம் அலுவலகத்திலேயே பல சமயங்களில் செக்ஸ் குறும்புகள் செய்துவந்துள்ளார்.

மேலும் சித்ராதேவியை பழனிச்சாமி தனது அறைக்கு அழைத்து தன்னோடு உல்லாசமாக இருக்க ஹோட்டலுக்கு வர வேண்டும்என்று வற்புறுத்தியுள்ளார். இதற்கு உடன்படாத சித்ரா தேவியை அதிகாரி பழனிச்சாமி மிரட்டியுள்ளார்.

இதனால் சித்ராதேவி, பழனிச்சாமிக்கு எதிராக தனது அலவலகத்தில் வேலை பார்க்கும் 21 ஊழியர்களின் ஆதரவை திரட்டிஅவர்கள் கையெழுத்து அடங்கிய புகார் மனு ஒன்றை தமிழக தலைமை செயலாளரை சந்தித்து கொடுத்தார். ஆனால் அந்த மனுமீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதனால் இன்று நாங்கள் அனைவரும் சித்ரா தேவிக்கு ஆதரவாக திரண்டு வந்து, இது குறித்து கவர்னரை சந்தித்து மனுகொடுத்தோம். கவர்னரும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்றனர்.

சித்ராதேவி உள்பட பல பெண்கள் தேர்தல் அதிகாரி பழனிச்சாமியால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+