For Daily Alerts
Just In
பிகார் புதிய முதல்வர் நிதீஷ்க்கு ஜெ. வாழ்த்து
சென்னை:
பீகார் தேர்தலில் வெற்றி பெற்று புதிய முதல்வராக பொறுப்பு ஏற்கும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதீஷ்குமாருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.நிதீஷ்க்கு ஜெயலலிதா அனுப்பிய வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
பிகார் சட்டப் பேரவைத் தேர்தலில் தங்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றிக்கு வாழ்த்துக்கள்.வலிமையான-நிலையான-ஊழலற்ற அரசைத் தாங்கள் அமைத்து, பிகார் மக்களின் நலனைக் காக்கவும்முன்னேற்றவும் வாழ்த்துகிறோம்.
வெற்றிகரமான-சிறந்த முதல்வராக முழுப் பதவிக் காலத்தையும் வகிக்க வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Comments
Story first published: Thursday, November 24, 2005, 5:30 [IST]