For Daily Alerts
Just In
யானை முகாம் பாகன் பெண்ணிடம் சில்மிஷம்!
முதுமலை:
முதுமலை யானைகள் முகாமில் சில காட்சிகள் |
முதுமலை யானைகள் முகாமுக்கு வந்துள்ள பாகன் ஒருவர் குடிபோதையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்தார். இதையடுத்து அவர்சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
முதுமலையில் தமிழக அரசின் சார்பில் யானைகள் புத்துணர்வு முகாம் நடந்து வருகிறது. சுமார் 50 யானைகள் பங்கேற்றுள்ள இந்தமுகாமில் ஒவ்வொரு யானையையும் கவனிப்பதற்கும் தலா 2 பாகன்கள் வந்துள்ளனர். இவர்களில் சிலர் யானையை கவனித்துக்கொண்டே, டாஸ்மாக் ஒயின் ஷாப்களில் டைம் பாஸ் செய்து வருகின்றனர். மது அருந்திவிட்டு கும்மாளம் போட்டு வருகின்றனர்.
முதுமலை யானைகள் முகாமில் சில காட்சிகள் |
இதில் திருவிடைமருதூர் கோவில் யானையை கவனிக்க வந்துள்ள பாகன்களின் ஒருவரான தியாகு, முழு போதையில் திரிந்துவந்தார். நன்றாகக் குடித்துவிட்டு ஜீப்பில் யானைகள் முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்த அவர் ஜீப்பில் இருந்த மற்றொருயானைப் பாகனின் மகளிடம் சில்மிஷம் செய்தார்.
இது குறித்து, அந்தப் பெண் தனது தந்தையிடம் தெரிவித்தார்.
முதுமலை யானைகள் முகாமில் சில காட்சிகள் |
உடனே அந்த பெண்ணின் தந்தை முகாமில் இருந்த அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கத்திடம் புகார் கொடுத்தார்.இந்த புகாரை தொடர்ந்து யானைப் பாகன் தியாகு சஸ்பெண்ட் செய்யப்பட்டு முகாமைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்:
புத்துணர்வு முகாமில் யானைகளுக்கு தினமும் காலை, மாலை இரு வேளை குளியல் நடக்கிறது. ஆனால் தொடர்ந்து மழைபெய்வதாலும் மாயார் ஆற்றுப்பகுதியில் வழுக்கல் அதிகமாக இருப்பதாலும் கடந்த 2 நாளாக யானைகள் குளிக்கவில்லை.மழையில் நனைந்தவாறே நிற்கின்றன.
முதுமலை யானைகள் முகாமில் சில காட்சிகள் |
மழை காரணமாக யானைகள் முகாமை பார்வையிட வனத்துறையினர் அனுமதி மறுத்ததால் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள்ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Story first published: Thursday, November 24, 2005, 5:30 [IST]