பிகாரில் அமைச்சர் ராஜினாமா: வீட்டை காலி செய்ய லாலுவுக்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
பாட்னா:
பிகாரில் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே அமைச்சர் ஜிதன் ராம் ராஜினாமா செய்தார். 1990ம் ஆண்டில் அமைச்சராகஇருந்தபோது அவர் செய்த ஊழல்கள் வெளிச்சத்தக்கு வந்ததையடுத்து அவரை பதவி விலகுமாறு உத்தரவிட்டார் முதல்வர்நிதிஷ்குமார்.
நேற்று காலை பதவியேற்ற ஜிதன் ராம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு அனுமதி தர செய்த ஊழல்கள் குறித்த விவரங்கள்தொலைக்காட்சிகளில் வெளியாயின. இதையடுத்து இரவோடு இரவாக அவரை ராஜினாமா செய்யச் சென்னார் நிதிஷ்.இதையடுத்து அவர் தனது ராஜினாமா கடிதத்ததை ஆளுநர் பூட்டா சிங்குக்கு அனுப்பி வைத்தார்.வீட்டை காலி செய்ய லாலுவுக்கு உத்தரவு:
இதற்கிடையே பதவியேற்ற கையோடு முதல்வர் இல்லத்தை காலி செய்யுமாறு ராப்ரி தேவிக்கு நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பாட்னாவில் நம்பர் 1, அன்னே மார்க் என்பது முதல்வரின் இல்ல முகவரியாகும். மிகப் பெரிய பரப்பளவில் அமைந்துள்ள இந்தபண்ணை இல்லத்தில் தான் லாலுவும் ராப்ரியும் கடந்த 15 வருடங்களாக வசித்து வருகின்றனர்.
இந் நிலையில் வீட்டை உடனே காலி செய்யுமாறு ராப்ரி தேவிக்கும் அவரது முன்னாள் அமைச்சர்களுக்கும் நிதிஷ்குமார்உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications