For Daily Alerts
Just In
வெள்ளப் பகுதிகளுக்கு ஜெ. பயணம்
சென்னை:
முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிட சுற்றுப்பயணம்மேற்கொள்கிறார்.
ஜெயலலிதா கடந்த 17ம் தேதி ஹைதராபாத் சென்று அங்குள்ள திராட்சை தோட்டத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். தமிழ்நாட்டில்தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளதால் ஜெயலலிதா இன்று மாலை சென்னைதிரும்புகிறார்.ஏற்கனவே வெள்ளம் பாதித்த 12 மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களை ஜெயலலிதா அனுப்பிவைத்துள்ளார். ஜெயலலிதா சென்னை திரும்பியதும் வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிடவும்ஏற்பாடு நடந்து வருகிறது.
அனேகமாக நாளையும், நாளை மறுநாளும் அவர் வெள்ளம் பாதித்த கடலூர், தஞ்சை, திருச்சி உள்பட பல மாவட்டங்களுக்குசெல்லலாம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
Comments
Story first published: Friday, November 25, 2005, 5:30 [IST]