பாராளுமன்ற அமளி: பாஜகவுக்கு கருணாநிதி சூடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாராளுமன்றத்தில் சோனியா காந்தி மற்றும் நட்வர் சிங் அகியோர் வோல்கர் அறிக்கை குற்றச்சாட்டுக்கு தார்மீக பொறுப்பேற்றுதங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதற்கு திமுகதலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது கண்டன அறிக்கையில் கருணாநிதி கூறியிருப்பதாவது:

பாஜகவினர் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவதால் மட்டும் லோல்கர் அறிக்கை விவகாரம் ஒரு முடிவுக்குவரப்போவதில்லை. அவர்கள் பாராளுமன்ற கூட்டத்தை நடத்த விடாமல் தடுப்பதில் எந்த நன்மையும் இல்லை.

மத்திய அரசு வோல்கர் விவகாரத்தை பற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்கும் என்று பிரதமரின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய்,நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி கூறியுள்ளனர்.

அதனால் வோல்கர் விவகாரத்தை பற்றி அமைதியுடன் விவாதிக்க எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். அதை விடுத்துபாராளுமன்றத்தை நடத்த விடாமல் அமளியில் ஈடுபடும் பாஜகவின் செயல் சரியல்ல.

இந்த பாஜகவின் இந்தியா ஒளிர்கிறது என்ற பிரச்சாரம் பொய்த்து போனதை இங்கே நினைவு கூர்கிறேன். இதனால் எதாவது ஒருகுற்றச்சாட்டை முன்னிறுத்தி பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு களங்கம் விளைவித்துவிட முடியும் எனபாஜக நினைத்தால் அவர்களுக்கு தோல்வி நிச்சயம்.

பாஜக ஆட்சியின் போது எழுந்த குற்றச்சாட்டில் எந்த அமைச்சராவது ராஜினாமா செய்துள்ளார்களா? பாஜகவினர்நாடாளுமன்றத்தில் இடையூறுகள் செய்து நாட்டின் ஜனநாயகத்தை வீழ்த்தப் பார்க்கிறார்கள்.

பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் இடையூறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மக்களுக்கு பதில் சொல்லியாகவேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே பாஜகவின் அமளியால் இன்றும் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+