For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புலிகளுடன் புதிய அமைதி ஒப்பந்தம்: ராஜபக்ஷே

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

விடுதலைப் புலிகளுடன் ஒளிவு மறைவு ஏதுமில்லாத புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகஇலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே கூறியுள்ளார். நார்வே மத்தியஸ்தத்துடன் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம் வெளிப்படையாகஇல்லை என்ற வகையில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் புதிய எம்பிக்களிடையே அவர் கூறுகையில்,

புலிகளுடன் வெளிப்படையான ஒப்பந்தம் செய்ய நான் தயார். அந்த ஒப்பந்தத்தால் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும்,சிறுவர்கள் புலிகளின் படையில் சேர்ப்பது நிறுத்தப்பட வேண்டும்.

தீவிரவாதத்துக்கு இடமில்லாத வகையில் அமைதி ஒப்பந்தம் இருக்க வேண்டும். புலிகளுடன் புதிய ஒப்பந்தம் ஏற்பட இந்தியாஉள்ளிட்ட நட்பு நாடுகளும் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் உதவ வேண்டும்.

புலிகளோடு பேச்சு நடத்த நாங்கள் தயார் தான். ஆனால், வட-கிழக்குப் பகுதிகளை தமிழர்களின் பாரம்பரிய நிலமாகஅங்கீகரிக்க முடியாது. இலங்கை என்பது ஒட்டுமொத்தமாக சிங்கள, தமிழ், இஸ்லாமிய, மலாய், பர்கர் இனத்தினரின் சொந்தமண்.

இந்த மக்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்க உரிமை உண்டு. நாட்டின் ஒருமைப்பாட்டில் தான் இனப் பிரச்சனைக்கு தீர்வுஉள்ளது என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய தமிழர்களிடம் சோதனை:

இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்களின் வீடுகள், அலுவலகங்களில் அந் நாட்டு போலீசார் சோதனைநடத்தினர். மெல்போர்ன், சிட்னியில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களில் புலிகளின் ஆதரவாளர்கள் என்று கருதப்படுவோரின்வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.

இது குறித்து ஆஸ்திரேலிய தமிழர் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரத்னம் கந்தசாமி கூறுகையில்,

ஆஸ்திரேலியாவுக்கு விடுதலைப் புலிகளால் எந்த சிறு மிரட்டல் கூட வந்ததில்லை. இந் நிலையில் ஆஸ்திரேலிய அரசின் இச்செயல் தமிழர்களிடையே அச்சத்தைப் பரப்பியுள்ளது. இதனால் தமிழர்கள் மீது ஆஸ்திரேலியர்களுக்கு தவறான கண்ணோட்டம்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X