சென்னை- தென் மாவட்ட ரயில்கள் ரத்து
சென்னை:
சென்னையிலிருந்து தென் மாவட்டத்திற்கு செல்லும் பெரும்பாலான ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் தென் மாவட்டங்களிலிருந்து சென்னை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.திருச்சி-விழுப்புரம் பகுதியில் தண்டவாளங்கள் அடித்து செல்லப்பட்டதாலும், மற்றும் அம்பாதுரை-கொடைரோட்டில்தண்டவாளங்களில் நிலச்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்துள்ளதாலும் அந்தப் பாதைகளில் ரயில் போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது.இன்று ரத்தாகியுள்ள சென்னை ரயில்கள்:
இதனால் சென்னையில் இருந்து புறப்படும் 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றின் விவரம்:
சென்னை-எழும்பூர் குருவாயூர் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்-திருச்சி பல்லவன் எக்ஸ்பிரஸ், எழும்பூர்-வைகை எக்ஸ்பிரஸ்,எழும்பூர்-முத்துநகர் எக்ஸ்பிரஸ், எழும்பூர்-பாண்டியன் எக்ஸ்பிரஸ், சென்னை-திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், எழும்பூர்-கோவைஎக்ஸ்பிரஸ், தஞ்சை-கோவை எக்ஸ்பிரஸ்,
சென்னை எழும்பூர்-தூத்துக்குடி முத்து நகர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம்-சென்னை எழும்பூர்-அனந்தபுரி எக்ஸ்பிரஸ்,திருச்சி-எர்ணாகுளம்-திருச்சி எக்ஸ்பிரஸ், மதுரை-ஈரோடு லிங்க், சென்னை எழும்பூர்-மதுரை சிறப்பு ரயில்,
தாம்பரம்-ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ், தாம்பரம்-ராமேஸ்வரம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ், தாம்பரம்-நாகூர்-தாம்பரம் எக்ஸ்பிரஸ்,தாம்பரம்-மயிலாடுதுறை பாஸஞ்சர், கோவை- மதுரை-கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாளையும் ரத்தாகும் ரயில்கள்:
சென்னை எழும்பூர்- திருச்சி பல்லவன் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்- மதுரை வைகை எக்ஸ்பிரஸ், தஞ்சாவூர்-கோவை ஜனசகாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரயில்களும் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாதி வழியில் ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:
சென்னை எழும்பூர்-குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் சென்னைக்கும் மதுரைக்கும் இடையிலும் நிறுத்தப்பட்டுவிட்டது.திருச்சி-ஹவுரா திருச்சிக்கும் எழும்பூருக்கும் இடையிலும், தஞ்சாவூர்-மைசூர்-தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் தஞ்சாவூர் ஈரோடுக்குஇடையிலும் நிறுத்தப்பட்டு அத்தோடு ரத்தும் செய்யப்பட்டுள்ளன.
மைசூர்-தூத்துக்குடி-மைசூர் ரயில் ஈரோடு, மதுரைக்கு இடையிலும், மங்களூர்-திருச்சி-மங்களூர் எக்ஸ்பிரஸ் ஈரோடு- திருச்சிக்குமத்தியிலும், தாம்பரம்-மயிலாடுதுறை-சோழன் எக்ஸ்பிரஸ் விழுப்புரம் மயிலாடுதுறை இடையிலும் நிறுத்தப்பட்டு ரத்துசெய்யப்பட்டுள்ளன.
மாற்றுப்பாதையில் இயங்கும் ரயில்கள்:
கோவை-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் கரூரில் இருந்து சென்னைக்கு ஈரோடு, ஜோலார்பேட்டை, அரக்கோணம், சென்னைகடற்கரை வழியாக சென்னை எழும்பூர் வந்தடையும்.
திருநெல்வேலி- சென்னை எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம், எர்ணாகுளம், சோரனூர் வழியாக சென்னை வந்தடையும்.
சென்டிரல்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் சோரனூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் வழியாகவும், மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்திருவனந்தபுரம், எர்ணாகுளம், ஷோரனூர், ஈரோடு வழியாகவும் மாற்றுப் பாதையில் செல்லும்.
இன்று சென்னை வந்து சேர வேண்டிய நிஜாமுதின்- மதுரை தமிழ்நாடு சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் சோரனூர், எர்ணாகுளம்,திருவனந்தபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி வழியாக திருநெல்வேலிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.
இத் தகவலை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தாமஸ் வர்கீஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications