பஸ்கள் வெள்ளத்தில் போனதில் சாவு எண்ணிக்கை 145 ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம் - தஞ்சாவூர்:

Near Tanjoor
பட்டுக்கோட்டை மற்றும் திருவாடானை அருகே இரு பஸ்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் இறந்தவர்களின்எண்ணிக்கை 145த்தைத் தாண்டும் என்று தெரிகிறது.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பெய்யும் கன மழை காரணமாக சருகுனி ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்குஏற்பட்டுள்ளது. ஜனவேலி என்ற இடத்தில் இந்த ஆறு, கடலில் கலக்கிறது. இந்த இடத்தில் ஒரு பாலம் உள்ளது இந்தப் பாலத்தின்மீதும் வெள்ளம் நிறைந்து ஓடுகிறது.

இந் நிலையில் திருச்சியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சென்ற பஸ் நேற்று இந்தப் பாலத்தில் மீது சென்றது. அதில் மொத்தம் சுமார்105 பேர் இருந்தனர். அப்போது காட்டாற்று வெள்ளம் பஸ்ஸை இழுத்துச் சென்றது. பயணிகளோடு அந்த பஸ் நீரில் உருண்டுசென்று கால்வாய்க்குள் விழுந்து மூழ்கியது.

மூழ்கிய பஸ்சில் இருந்து 15 பேர் வெளியேறி நீந்திக் கரை சேர்ந்தனர். டிரைவர், கண்டக்டரும் நீந்தி வெளியேறிவிட்டனர்.இதனால் இந்த பஸ்சில் இருந்த 65 பேர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.

மிக சக்தி வாய்ந்த கிரேன்கள் கொண்டு வரப்பட்டு பஸ் நீரில் இருந்து வெளியே இழுக்கப்பட்டது. அதில் இருக்கைகளில்அமர்ந்தபடி 10 பேர் பிணமாகக் கிடந்தனர். இன்று காலை வரை பஸ் மற்றும் கால்வாய்க்குள் கிடந்த 44 பேரின் உடல்கள்மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.

பட்டுக்கோட்டை: பஸ் கவிழ்ந்து 80 பேர் பலி

அதே போல தஞ்சாவூர் அருகே பட்டுக்கோட்டையை அடுத்த கொடிக்குளம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த தனியார்பேருந்து அஸ்வினி ஆற்று வெள்ளத்தில் சிக்கியது.

Body coming out of the bus
அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டைக்குச் சென்ற அந்த பஸ் நேற்று மாலை 4.30 மணிளவில் வெள்ளம் நிரம்பிய சாலையில்சென்றது. அப்போது அந்த பஸ்ஸை நீர் அடித்துச் சென்றது. இதில் அந்த பஸ் பஸ்சில் இருந்த 80 பயணிகள் பலியாகிவிட்டனர்.

பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பஸ் மகாராஜா சமுத்திரம் என்ற இடத்தில்வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது. அதில் பயணம் செய்தவர்களில் 80 பேர் பலியாகிவிட்டனர். இதில் 10 பேர் ஒரே குடும்பத்தைச்சேர்ந்தவர்கள்.

இந்த இரு விபத்துக்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக் 220தைத்தாண்டிவிட்டது.

இது தான் தமிழ்நாடு அரசு...

ஆனால், இரு பஸ் விபத்துக்களிலும் பலியானவர்களின் எண்ணிக்கை வெறும் 67 தான் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

விபத்துக்களில் பலியான 67 பஸ் பயணிகளுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ள முதல்வர்ஜெயலலிதா, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 நிதியுதவி அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+