கடலூர், திருச்சியில் பல கிராமங்கள் நீரில் மூழ்கின: 2,000 பேர் கதி? பெரும் அளவில் உயிர்ப் பலி?
கடலூர் - திருச்சி:
கடலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் கன மழை காரணமாக நூற்றுக்கணக்கான கிராமங்கள் நீரில் மூழ்கிவிட்டன.
திருச்சியில் அரியமங்கலம், திருவெறும்பூர், வெங்கூர்பூஜை துறை, கீழ்முருக்கூர், மேல் முருக்கூர், முருக்கூர், உள்ளிட்ட பகுதிகளில்பல கிராமங்கள் நீருக்குள் மூழ்கிவிட்டன.
அதே போல கடலூர் மாவட்டத்தில் சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், ஓரத்தூர் ஆகிய பகுதியைசுற்றியுள்ள சுமார் 300 கிராமங்கள் மூன்றாவது நாளாக மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து முழுமையாகத்துண்டிக்கப்பட்டுள்ளன.
![]() |
இதற்கிடையே கடலூரிலும் திருச்சியிலும் மீட்புப் பணிக்காக பெங்களூர், கோவையில் இருந்து ராணுவ வீரர்கள்வந்திறங்கியுள்ளனர். ஆனால், வெறும் 500 பேரே வந்திருப்பதால் அவர்களால் பெரிய உதவி ஏதும் மாவட்ட நிர்வாகத்துக்குஇல்லை.
அதே போல கடலூரில் நீரால் சூழப்பட்ட கிராமங்களில் மீட்புப் பணிகளுக்காக நூற்றுக்கணக்கான லாரிகளில் சிறிய மோட்டார்படகுகளும் மீனவர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனால், சாலைகளில் வெள்ளம் ஓடுவதால் அந்த லாரிகளால்குறிப்பிட்ட இடங்களை அடைய முடியவில்லை.
இதனால் நீரால் சூழப்பட்ட கிராமங்களுக்கு 20 கி.மீ. தொலைவிலேயே படகுகளுடன் லாரிகள் நின்று கொண்டுள்ளன. இந்தப்படகுகளில் 20 கி.மீ. தூரம் பயணித்து மீட்புப் பணி மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications