திருச்சி தனித் தீவானது: நகர் முழுவதும் வெள்ளக் காடு- ஸ்ரீரங்கம் துண்டிப்பு

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

Trichy
திருச்சி மாநகரத்தை முழு அளவில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து திருச்சி முழுமையாகதுண்டிக்கப்பட்டு தீவு போல காட்சியளிக்கிறது.

ஸ்ரீரங்கத்தின் பல பகுதிகளுக்குள்ளும் நீர் புகுந்துள்ளது. திருச்சிக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் இடையிலான சாலைத் தொடர்பும்அறுந்துவிட்டது.

கடலூர், சிதம்பரம் மாவட்டங்களில் பெய்த கன மழையால் நிரம்பி வழிந்த ஆறுகளின் நீர் கொள்ளிடம் மற்றும் காவேரி ஆற்றில்கலந்ததால் காவேரியில் மிகப் பெரும் வெள்ளம் ஏற்பட்டது.

இந்த திடீர் வெள்ளம் திருச்சி நகருக்குள் புகுந்துவிட்டது. கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஸ்ரீரங்கத்தை இணைக்கும்சாகைளை மூடிவிட்டது. இதனால் ஸ்ரீரங்கம் முழுமையாக துண்டிக்கப்பட்டது.

Trichy
ஸ்ரீரங்கத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் நீருக்குள் மூழ்கிவிட்டன. தட்டச்சர் கார்டன் பகுதியில் உள்ள அரசுக்குடியிருப்புகளுக்குள்ளும் நீர் புகுந்துவிட்டது. ஸ்ரீரங்கம் அம்மா மண்பத்தை நீர் சூழந்தவுடன் அந் நகரில் இருந்துஆயிரக்கணக்ாகன மக்கள் வெளியேறிவிட்டனர்.

அதே போல கல்லணையை ஒட்டிய பல வாய்க்கால்களில் உடைப்புகள் ஏற்பட்டு பல கிராமங்களுக்குள்ளும் நீர் புகுந்துள்ளது.இந்தப் பகுதி மக்கள் அலறியபடி கல்லணையின் மேட்டுப் பாங்கான பகுதிகளுக்கு ஓடி வந்து தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதற்கிடையே கல்லணையின் மேற்கே காவிரியிலும் உடைப்பு ஏற்பட்டு வேங்கூர், அரசங்குடி உள்ளிட்ட பல கிராமங்களைமூழ்கடித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+