கடலூரில் கருணாநிதி: நிவாரண உதவி: மக்களுக்கு ஆறுதல்

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

கடலூர் வெள்ளச் சேத பகுதிகளை திமுக தலைவர் கருணாநிதி இன்று பார்வையிட்டார்.

கடலூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கிஉள்ளது. சாலை மற்றும் பாலங்கள் சேதம் அடைந்துள்ளன. 3 லட்சம் மக்கள் தவிக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை கருணாநிதி இன்று நெய்வேலி அருகே குள்ளச்சாவடி வழியாக சென்றுபார்வையிட்டார். குள்ளச்சாவடி பக்கம் உள்ள அடூர் அகரம் கிராமத்தில் பரவனாறு செல்கிறது. அந்த பாலத்தின் மீதுநின்று கொண்டு சேதம் அடைந்த பயிர்களை பார்த்தார். பரவனாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பரதம்பட்டுகிராமம் முழுவதும் முழ்கிவிட்டது.

பாதிக்கப்பட்ட அந்த கிராமத்து மக்கள் கருணாநிதியை சந்தித்து தங்களது கிராமத்துக்கு நேர்ந்த சோகத்தை எடுத்துகூறினர்.

அவர்களுக்கு 10 கிலோ அரிசி, இலவச வேட்டி-சேலை மற்றும் பிஸ்கேட்டுகளை வழங்கினார். அப்போதுகருணாநிதியின் காலில் விழுந்து நாங்கள் உடமைகளை இழந்து தவிக்கிறோம் என கண்ணீர் விட்டு கதறினார்.இதனை பார்த்த கருணாநிதியும் கண் கலங்கினார்.

பிறகு அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற கிராமங்களை பார்த்தார். இதை தொடர்ந்து விழுப்புரம் செல்லும்கருணாநிதி அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+